கெங்கவல்லி, ஏப்.25: சேலம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் மகாலிங்கம் மூர்த்தி உத்தரவின் பேரில், கெங்கவல்லி தீயணைப்பு நிலையம் மற்றும் வனத்துறை இணைந்து வனப்பகுதியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, தீ தடுப்பு செயல்விளக்க முகாம் நடைபெற்றது. நிலைய அலுவலர்(பொ) செல்லப்பாண்டியன், அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட தீயணைப்பு துறை வீரர்கள் வனப்பகுதியில் திடீரென ஏற்படும் தீ விபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது, தீ விபத்தில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டால் அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, எதிர் தீ மூட்டி எவ்வாறு தீயை கட்டுப்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் வனக்காவலர் தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post தீ தடுப்பு குறித்த செயல்விளக்கம் appeared first on Dinakaran.