சென்னை: சென்னை நங்கநல்லூர் திஹா கிளினிக் சார்பில் ஆரோக்கியமாக இருந்தால், மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதை வலியுறுத்தி மூத்த குடிமக்களின் விழிப்புணர்வு நடைப்பயணம் நேற்று நடைபெற்றது.
‘ஆரோக்கியமாக இருந்தால், மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்பதை வலியுறுத்தி திஹா கிளினிக், நங்கநல்லூர் மூத்த குடிமக்கள் மன்றம், நங்கநல்லூர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ‘நடங்க நல்லூர்’ என்ற விழிப்புணர்வு நடைப்பயணம் சென்னை நங்கநல்லூரில் நேற்று நடைபெற்றது. சுமார் 2 கிமீ தூரத்துக்கு நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் 300-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பங்கேற்றனர்.