‘திறம்பட பணியாற்றியவர்’: முன்னாள் எம்.பி மலைச்சாமி மரணத்துக்கு இபிஎஸ் இரங்கல்

4 months ago 15

சென்னை: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மலைச்சாமி (87) சென்னையில் புதன்கிழமை காலமானாா். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இபிஎஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளரும், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான மலைச்சாமி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் டாக்டர் மலைச்சாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் திறம்பட பணியாற்றியவர்.

Read Entire Article