“திறந்தவெளி சிறைச்சாலைகள் மூலமாக மட்டுமே கைதிகளிடம் நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்த முடியும்”

1 hour ago 3

சென்னை: சென்னை தரமணியில் உள்ள ஏசியன் இதழியல் கல்லூரி மற்றும் இந்திய நீதி அறிக்கை அமைப்பின் சார்பில் இந்திய சிறை அமைப்புகள் குறித்த குழு கலந்துரையாடல் ஏசியன் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில், ஏசியன் இதழியல்கல்லூரித் தலைவர் சசிக்குமார் வரவேற்றார். இந்திய சிறைகளின் இன்றைய கட்டமைப்புகள் மற்றும்அதற்கான நிதி ஒதுக்கீடு, கைதிகளின் எண்ணிக்கை, மறுவாழ்வு குறித்த ஆய்வு அறிக்கையை இந்தியநீதி அறிக்கையின் முதன்மை ஆசிரியர் மஜா தருவாலா சமர்ப்பித்தார்.அதைத் தொடர்ந்து, ‘சிறை சீர்திருத்தத்துக்கான பாதைகள்’ என்றதலைப்பில் ஒடிசா உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் பங்கேற்று பேசியதாவது:

நீதி அமைப்பு என்பது பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும், நம்பிக்கையைப் பெறும் வகையிலும் இருக்க வேண்டும். சீர்திருத்தும் மையங்களாக சிறைச்சாலைகள் மாற வேண்டும். சிறைகளில் அதிகப்படியான கைதிகளின் எண்ணிக்கை, தாமதமாகும் விசாரணை, தேவையான உதவிகள் கிடைக்கப்பெறாமை, தனிமைவாசம் போன்றவற்றால் கைதிகள் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

Read Entire Article