திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாக புகார்..

7 months ago 26
திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலையில் உரங்களை விற்பனை செய்த புகாரில் சிக்கிய 14 தனியார் கடைகள் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்துறை பொறுப்பு இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பதோடு, இணை பொருட்களை வாங்கினால் தான் உரம் வழங்கப்படும் என கூறுவதாக புகார்கள் வந்ததையடுத்து, குடவாசல், வடபாதிமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Read Entire Article