திருவாரூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வட்டார கல்வி அலுவலர் அறிவழகன் வழங்கல்

1 week ago 5

திருவாரூர் ஜுன் 5 திருவாரூர் ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 81 பள்ளிகளில் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கும் பணியினை வட்டார கல்வி அலுவலர் அறிவழகன் துவங்கி வைத்தார்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் கடந்த 2ந் தேதி திறக்கப்பட்டன. கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், பேக்குகள் மற்றும் காலணிகள் வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவுக்கு ஏற்ப 4வது ஆண்டாக பள்ளிகள் திறக்கப்பட்ட நாளிலேயே மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன.

சென்னையில் பாட புத்தகங்கள் வழங்கும் பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில் மாவட்டங்களில் கலெக்டர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மூலம் இந்த பணியானது துவங்கி வைக்கப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கும் பணியினை கொரடாச்சேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் மோகனச்சந்திரன் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் துவங்கி வைத்தனர். இதனையடுத்து அனைத்து ஒன்றியங்களிலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கும் பணி நடைபெற்றது. அதன்படி திருவாரூர் ஒன்றியத்தில் இயங்கி வரும் 69 அரசு துவக்க பள்ளிகள் மற்றும் 12 அரசு உதவி பெறும் துவக்க பள்ளிகள் என மொத்தம் 81 பள்ளிகளில் 6 ஆயிரத்து 950 மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கும் பணியினை புத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் அறிவழகன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மணிமாறன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவக்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதா மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வட்டார கல்வி அலுவலர் அறிவழகன் வழங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article