
திருவாரூர்,
மன்னார்குடி
மன்னார்குடி உதவி செயற்பொறியாளர் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மன்னார்குடி துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருக்கிறது. இதனால் இந்த மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான மன்னார்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, மேலவாசல், எம்பேத்தி, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, மூவாநல்லூர், நாவல்பூண்டி, பாமணி, கர்ணாவூர், சித்தேரி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்னிலம்
திருவாரூர் புறநகர் உதவி செயற்பொறியாளர் பிரபாகர்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நன்னிலம், ஏனங்குடி, கங்களாஞ்சேரி, ஆணைகுப்பம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நன்னிலம், வடகுடி, கம்மங்குடி, குலக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி ஆகிய பகுதிகள். அதேபோல் ஆண்டிப்பந்தல், குவளைக்கால், விசலூர், மூங்கில் குடி, காக்கா கோட்டூர், ஆணைகுப்பம், ஏனங்குடி, பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.