திருவாரூர், பிப். 14: திருவாரூர் நகராட்சியுடன் தண்டலை, கீழகாவாதுகுடி, வேலங்குடி, இலவங்கார்குடி, தேவர்கண்டநல்லு£ர் மற்றும் காட்டூர் என 6 ஊராட்சிகள் முழுமையாகவும், அலிவலம், புலிவலம், பழவனக்குடி, அம்மையப்பன் மற்றும் பெருந்தரக்குடி ஊராட்சிகள் பகுதியாகவும் இணைப்பதற்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. நகரமயத்தினை பெரும்பாலான பொதுமக்கள் ஆதரித்தாலும், 100 நாள் வேலை திட்டம் எனப்படும் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டமும் பறிபோகும் என்பதால் இந்த நகரமயம் திட்டத்திற்கு எதிர்ப்பும் இருந்து வருவதால் நகர பகுதியில் இணைக்கப்படும் ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிப்பதுடன் அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி பெருந்தரக்குடி ஊராட்சியை திருவாரூர் நகராட்சியுடன் இணைக்கப்படுவதை கண்டித்தும், இணைப்பு முடிவினை கைவிட கோரியும் கிராம மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் பேரணியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
The post திருவாரூர் நகராட்சியுடன் பெருந்தரக்குடி ஊராட்சி இணைக்கப்படுவதை கைவிடக்கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.