திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம்: 316 மனுக்கள் வருகை

3 months ago 9

திருவாரூர், பிப். 11: திருவாரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 316 கோரிக்கை மனுக்களை கலெக்டர் மோகனசந்திரன் பெற்றுகொண்டார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 316 மனுக்களை அளித்தனர். பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மோகனசந்திரன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

மேலும் வழக்கம் போல் தரைதளத்தில் மாற்றுதிறனாளிகளிடம் அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார். தொடர்ந்து 2022-23ம் ஆண்டிற்கு 3 ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்தில் பதவி உயர்விற்கான ஆணையும் கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார். இதில் டி.ஆர்.ஒ சண்முகநாதன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம்: 316 மனுக்கள் வருகை appeared first on Dinakaran.

Read Entire Article