திருவள்ளூர் ரயில் விபத்து: 4 பாதைகளிலும் இயல்பு நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை

5 hours ago 4

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 4 ரயில் பாதைகளிலும் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனால், ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

சென்னை துறைமுகத்தில் இருந்து, 50 டேங்கர்களில் பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொண்டு நேற்று முன் தினம் அதிகாலை சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 18 டேங்கர்கள் எரிந்து நாசமாயின.

Read Entire Article