திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலையிலிருந்து 3 அனுமான் குரங்குகள் தப்பி ஓட்டம்

6 months ago 33

திருவனந்தபுரம், அக். 1: திருவனந்தபுரத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில் வெள்ளைப்புலி, அனகோண்டா உள்பட ஏராளமான அரிய விலங்குகள் உள்ளன. இங்கு 4 அனுமான் குரங்குகள் உள்ளன. இதில் ஒன்று ஆண் குரங்கு ஆகும். சமீபத்தில் தான் இவை திருப்பதி மிருகக்காட்சி சாலையிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் இதில் 3 பெண் அனுமான் குரங்குகள் நேற்று காலை இங்கிருந்து தப்பி ஓடின. இதுகுறித்து அறிந்ததும் மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் அவற்றைப் பிடிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இங்கிருந்து ஒரு அனுமான் குரங்கு தப்பி ஓடியது. சில நாட்களுக்குப் பின்னர் தான் அந்தக் குரங்கை மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் பிடித்தனர்.

The post திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலையிலிருந்து 3 அனுமான் குரங்குகள் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article