திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு! 

5 hours ago 2

ராமேசுவரம்: பாம்பன் புதிய பாலம் திறக்கப்பட்டதால் திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட்டு ராமேசுவரம் வரையிலும் நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல் வழியாக மதுரை வரை அமிர்தா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16343) இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் மதுரையில் இருந்து எதிர் மார்க்கத்தில் (வண்டி எண் 16344) திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு ஏசி முதல் வகுப்பு, ஒரு ஏசி இரண்டு டயர் கோச், ஏசி மூன்று டயர் கோச், 13 சிலிப்பர் கிளாஸ் கோச், மூன்று பொது இரண்டாம் வகுப்பு, இரண்டு இரண்டாம் வகுப்பு கோச் என மொத்தம், 23 பெட்டிகளை கொண்டது.

Read Entire Article