திருவனந்தபுரம் அருகே மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது

2 weeks ago 1

திருவனந்தபுரம், ஜன. 25: திருவனந்தபுரம் அருகே ஆரியநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (60, பெயர் மாற்றம்). கூலித் தொழிலாளி. அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் பிரிந்து சென்று விட்டார். ஜெயராஜுக்கு 30 வயதில் ஒரு மகள் உண்டு. அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இளம்பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். தொடர்ந்து தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார். இந்த நேரத்தில் ஜெயராஜ் தனது மகளை அடிக்கடி பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளம்பெண் ஆரியநாடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திருவனந்தபுரம் அருகே மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது appeared first on Dinakaran.

Read Entire Article