திருவனந்தபுரத்துக்கு அய்யா வைகுண்டர் பாதயாத்திரை

2 months ago 11

தென்தாமரைகுளம், நவ.17: குமரி மாவட்டம் சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரம் வரை அய்யா வைகுண்டர் புனித மகா பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சி பூஜித குரு பால. பிரஜாபதி அடிகளார் தலைமையில் நடைபெற்றது. பாதயாத்திரையை கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி. டி. செல்வகுமார் துவக்கி வைத்தார். வளவன், தர்ம ரஜினி மற்றும் வள்ளலார் பேரவை மாநில தலைவர் பத்மேந்திரா ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கமலிகா காமராஜர் கலந்து கொண்டார். இதில் ஏராளமான அய்யா வைகுண்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதயாத்திரை சாமிதோப்பில் இருந்து துவங்கி நாகர்கோவில், வில்லுக்குறி, மார்த்தாண்டம் வழியாக திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு பதியில் வியாழன் அன்று உச்சிபடிப்பு, பணிவிடை, தர்மங்களுடன் நிறைவடைகிறது.

The post திருவனந்தபுரத்துக்கு அய்யா வைகுண்டர் பாதயாத்திரை appeared first on Dinakaran.

Read Entire Article