
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக, அப்பகுதியை சேர்ந்த பெற்றோர் தொடர்ந்து 2-வது நாளாக தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்துள்ளனர். ஒரு சில மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்ததால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், ஊர்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.