நாகப்பட்டினம், ஜன.23: திருமருகல் அருகே கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அருகே திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் திருக்கண்ணபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த கோயில் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து உதவி ஆணையர் ராணி தலைமையில் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) அமுதா, கோவில் செயல் அலுவலர் குணசேகரன், சரக ஆய்வாளர் சதிஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதிக்கு சென்றனர். கிராம மக்கள் ஒத்துழைப்புடன் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை மீட்டனர். அந்த இடத்தில் கோயிலுக்கு சொந்தமான இடம் என்று பதாகை வைக்கப்பட்டது.
The post திருமருகல் அருகே கோயில் நிலம் மீட்பு appeared first on Dinakaran.