திருமயம் அருகே சமூக ஆர்வலர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கல் குவாரி உரிமையாளர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள வெங்களுரைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலரும், அதிமுக சிறுபான்மையினர் பிரிவு ஒன்றியச் செயலாளருமான ஜகபர் அலி(56), கனிம வளக் கொள்ளைக்கு எதிராக செயல்பட்டு வந்தால் கடந்த 17-ம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக கல் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், ஒட்டுநர் காசிநாதன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கல்குவாரியின் மற்றொரு உரிமையாளரான ராமையாவை போலீஸார் தேடி வந்தனர்.