திருமங்கலம், மே 8:திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராமர்(35). கடந்த 3ம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னை புறப்பட்டுச் சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு அவர்கள் அனைவரும் ஊருக்கு திரும்பினர். அப்போது ராமர் வீட்டின் மாடி கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பூஜை அறையின் இருக்கும் பீரோவை உடைத்து அதிலிருந்த தங்க நெக்லஸ், செயின், 2 ஜோடி வளையல், மோதிரம், தோடு உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து ராமர் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, வீடு புகுந்து நகை பணம் திருடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருமங்கலம் அருகே வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை appeared first on Dinakaran.