திருமங்கலத்தில் பாலம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்

3 months ago 9

திருமங்கலம், பிப். 7: திருமங்கலம் நகரிலிருந்து விருதுநகர், நெல்லை, ராஜபாளையம், தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல குண்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆறுகண் பாலம் பயன்பட்டு வருகிறது. தற்போது திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருவதால், தென் மாவட்டங்களிலிருந்து திருமங்கலம் நகர் வழியாக மதுரை செல்ல வசதியாக புதிதாக மற்றொரு ஆறுகண் பாலம் தற்போதைய பாலத்தின் அருகே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாலத்தின் வழியாக தென் மாவட்டங்களிலிருந்து திருமங்கலம் நகருக்குள் வாகனங்கள் வந்து செல்கின்றன. புதிய பாலம் வந்ததால் பழைய ஆறுகண் பாலத்தினை புதுப்பிக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் துவக்கியுள்ளனர். ஆறுகண்பாலம் என திருமங்கலம் பகுதி மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இந்த குண்டாறு பாலம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளை கடந்துள்ளது.

The post திருமங்கலத்தில் பாலம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article