திருப்பூரில் பட்டாசு தயாரிக்கும்போது விபத்து: 2 பேர் உயிரிழப்பு; 8 பேர் காயம்  

7 months ago 38

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட வெடி விபத்ததில் இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர், சத்யா காலனி, பொன்விழா நகர் பகுதியில் கார்த்தி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இன்று (அக்.8) காலை சுமார் 11 மணி அளவில் அதிக சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் இருவர் உடல் சிதறி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த வெடி விபத்தில் 10 வீடுகள் சேதம் அடைந்தன. திருமுருகன்பூண்டி போலீஸார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

Read Entire Article