திருப்பரங்குன்றம் வழக்குகளில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: தலைமை நீதிபதி முடிவுக்கு பரிந்துரை

3 days ago 2

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து உரிய முடிவு எடுக்க தலைமை நீதிபதி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.

விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில், திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக் கோரியும், ராமலிங்கம் என்பவர் திருப்பரங்குன்றம் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கக் கோரியும், சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில், தர்காவை பராமரிக்க அனுமதி வழங்கவும், தர்காவுக்கு செல்லும் வழியில் மின்விளக்கு வசதி செய்யக் கோரியும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Read Entire Article