மதுரை: திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்றாக அறிவிக்கவும், அந்த மலையை மீட்டு பராமரிக்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், தமிழக தொல்லியல் துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘நான் தமிழகத்திலுள்ள அனைத்து தமிழ் சமண கோயில்களின் குருவாக இருக்கிறேன். மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் சமண நினைவுச் சின்னங்கள் பல உள்ளன. திருப்பரங்குன்றம் கோயில் சமண சமயத்துக்கான பல கட்டமைப்புகளை கொண்டுள்ளது.