திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவது தேவையில்லாத பிரச்னையை உருவாக்கும் : ஐகோர்ட் கருத்து

2 hours ago 2

சென்னை : திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவது தேவையில்லாத பிரச்னையை உருவாக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை ஏகாம்பரேஸ்வர் கோயில் முதல் கந்தக்கோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஆஜரான அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர், “திருப்பரங்குன்றம் மலை உரிமை விவகாரம், ப்ரிவியூ கவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்ட பிறகு, அது குறித்து மீண்டும் பிரச்னை எழுப்புவது சரியல்ல. தர்கா சார்பில் விலங்கு பலியிட்டு சமபந்திக்கு அழைப்பு விடுப்பதாக போலியான போஸ்டர்கள் வெளியிடப்பட்டு, அது தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

காவல்துறை தரப்பில், “திருப்பரங்குன்றம் மலையை காரணமாக்கி, மக்களின் ஒற்றுமை குலைத்து விடக்கூடாது. யாத்திரைக்கு மனுதாரர் கேட்கும் வழித்தடம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை ஆகும். யாத்திரைக்கு அனுமதி வழங்கினால்; அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும்,”இவ்வாறு தெரிவித்தார். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், “பேரணி நடத்த கேட்டுள்ள இடம் கூட்ட நெரிசல் மிகுந்தது. திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும், இந்த இடத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்கப் பார்க்கிறீர்கள்,”இவ்வாறு தெரிவித்தார். மேலும் வேறு இடம் தேர்வு செய்து தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளை மறுதினம் ஒத்திவைத்தார்.

The post திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவது தேவையில்லாத பிரச்னையை உருவாக்கும் : ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article