மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் மலையை பாதுகாக்கக் கோரி தடையை மீறி இன்று நடக்கும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் பங்கேற்பதோடு, மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்களை திரண்டு வருமாறு அழைப்பு விடுத்து வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். போராட்டத்தை தடுக்க பலரும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.