திருப்பத்தூர் அருகே நெல் அடிக்கும் போது அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

6 months ago 24
திருப்பத்தூர் அடுத்த குறும்பகேரி புதூர் கிராமத்தை சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி சசிகலா விவசாய நிலத்தில் அறுத்து வைத்த நெற்கதிர்களை சுமந்து சென்று அறுவடை இயந்திரத்தில் போடும் போது சேலை எந்திரத்திற்குள் சிக்கியதால், உள்ளே இழுக்கப்பட்டு உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்து விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல் அறுவடை பணியின் போது சசிகலா, தனது சேலைக்கு மேல் ஆண்கள் அணியும் சட்டையை அணிந்திருந்தால் இது போன்ற அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது என்று போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article