திருப்பதி : திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்த புகார் தொடர்பான வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். நெய்யில் கலப்படம் செய்த புகார் தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏஆர் நிறுவன தலைவர் ராஜசேகர், வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தின் அபூர்வா சாவ்தா, போலே பாபா பால் பண்ணை நிறுவன முன்னாள் இயக்குநர் விபின் ஜெயின், பொமில் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
The post திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம்- 4 பேர் கைது appeared first on Dinakaran.