
திருமலை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் 100 சைக்கிள்களை காணிக்கையாக வழங்கி உள்ளது. அந்தச் சைக்கிள்களை கோவில் முன்னால் நிறுத்தி அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகள் செய்தனர்.
அந்தச் சைக்கிள்களை தனியார் நிறுவன பிரதிநிதிகள் வழங்க, அவைகளை கோவில் துணை அதிகாரி லோகநாதன் பெற்றுக் கொண்டார். அந்தத் தனியார் நிறுவன பிரநிதிகளுக்கு கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.