‘திருப்பணிகளை முறையாக முடிக்காமல் கும்பாபிஷேகம் நடத்துவதா?’ - அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்

1 month ago 10

சென்னை: திருப்பணிகளை முறையாக முடிக்காமல், அரசின் பெருமைக்காக அவசரகதியில் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்துவதா என இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையில், "தென்காசி, காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் முழுவதுமாக முடியாத நிலையில் அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டதற்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. (தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.)

Read Entire Article