‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி: டி-1 காவல் நிலைய நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல உத்தரவு

2 hours ago 1

சென்னை: ‘இந்து தமிழ் திசை நாளிதழ்’ எடுத்த முயற்சி காரணமாக, வாலாஜா சாலையில் உள்ள டி-1 காவல் நிலைய பேருந்து நிலையத்தில் அண்ணா சதுக்கத்தில் இருந்து வரும் அனைத்துமே நின்று செல்ல போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை, அண்ணாசாலை, அண்ணா சிலை சந்திப்பில் இருந்து வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கத்துக்கு இயக்கப்படும் மாநகரப் பேருந்து வழித்தடம் 2-ஏ, 29-ஏ, 27-பி, 29-டி மற்றும் விவேகானந்தர் இல்லத்துக்கு இயக்கப்படும் தடம் எண் 32-பி, 38-சி ஆகியவை டி-1 காவல் நிலைய பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.

Read Entire Article