காரைக்கால்,ஜன.11: திருப்பட்டினத்தில் ரூ.45 லட்சம் செலவில் சாலைகள் மேம்பாட்டு பணிகளை நாக தியாகராஜன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். காரைக்கால் மாவட்டம் திரு-பட்டினம் தொகுதிக்குட்பட்ட படுதார்கொல்லை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி மற்றும் வடக்கு வீதிகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி-2022-2023 மேம்படுத்துதல் கீழ் ரூ.45 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. சாலைகள் மேம்பாட்டு பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆணையர் கண்ணப்பன், இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் ராவணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post திருப்பட்டினத்தில் 45 லட்சம் செலவில் சாலைகள் மேம்பாட்டு பணி appeared first on Dinakaran.