திருநெல்வேலியை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற விழிப்புணர்வு பேரணி

5 hours ago 2

திருநெல்வேலி மாவட்டத்தில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவின்படி, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் போதை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உட்கோட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் போதை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறையினர் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களை நேரில் சந்தித்து போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்பு மாணவ மாணவிகள் போதை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பதாதைகள் ஏந்தி நகரின் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Read Entire Article