
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தெற்கூர், சமூகரெங்கபுரம், தெற்கு தெருவை சேர்ந்த பால்பாண்டி மகன் நவீன்குமார் (வயது 30) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரகுராஜன் கவனத்திற்கு வந்தது.
இதனையடுத்து அவர், நவீன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில், நவீன்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.