திருநின்றவூரில் 30 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை

2 months ago 8

திருநின்றவூர் வடக்கு பிரகாஷ் நகரில் 30 ஆண்டுகளாக சாலைகள் செப்பனிடப்படாமல் உள்ளதாக, உங்கள் குரல் சேவையை தொடர்பு கொண்டு வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திருநின்றவூரை சேர்ந்த வாசகர் பி.டி.சுப்பிரமணியன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் உங்கள் குரல் சேவையை தொடர்பு கொண்டு கூறியதாவது: திருநின்றவூர் நகராட்சியின் 8-வது வார்டு, வடக்கு பிரகாஷ் நகரில் சேரன், சோழர் மற்றும் பாண்டியன் ஆகிய தெருக்கள் உள்ளன. இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. தற்போது நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இப்பகுதியில் உள்ளன. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

Read Entire Article