திருத்துறைப்பூண்டி, ஜன.17: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் மெயின்ரோடு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது. பொதுமக்கள் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அந்த பயணிகள் நிழலகம் தரைத்தளம் பயணிகள் அமருமிடம் சேதமடைந்துள்ளது. இதனால் தினந்தோறும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள், பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பேருந்து பயணிகள் நிழலகத்தை சீரமைத்து தரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருத்துறைப்பூண்டி அருகே பழுதடைந்த நிழற்குடை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.