திருத்தணி ரயில் நிலைய பெயர் பலகையின் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் 22 பேர் கைது

3 hours ago 1

திருத்தணி: திருத்தணி ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்டால் அழித்த திமுகவினர் 22 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக திமுக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கிரண் தலைமையில், 20-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் திருத்தணி ரயில் நிலையத்தில் திரண்டு, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

Read Entire Article