சென்னை: திருத்தணி நகராட்சி சார்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள தினசரி நாளங்காடி வணிக வளாகம் திறப்பு விழா அழைப்பிதழில் காமராஜர் பெயர் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திருத்தணி நகராட்சி ம.பொ.சி. சாலையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக காமராஜர் பெயரில் இயங்கி வந்த தினசரி வணிக வளாகத்தை சமீபத்தில் திருத்தணி நகராட்சி நிர்வாகத்தால் புதுப்பிக்கப்பட்டு காமராஜர் பெயரை மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டது. அந்த முயற்சிக்கு எதிராக தமிழகத்தில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமாகா, பாமக, நாதக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி உள்பட பல அரசியல் கட்சிகளும் நாடார் சமுதாய அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததின் விளைவாக மாநில நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் சார்பில் திருத்தணியில் புதுப்பிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் தினசரி வணிக வளாகத்துக்கு காமராஜர் பெயரே தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.