திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

4 days ago 2

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் யாகசாலையில் தொடங்கி திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜைகளில் தமிழில் மந்திரங்கள் ஓதப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ல் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். இதுவரை பதில் இல்லை. எனவே திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை, கருவறை, கோபுர விமான பூஜையில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

Read Entire Article