திருச்சி, பிப்.10: திருச்சியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி திருவளர்ச்சோலை பொன்னுரங்கபுரம் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக ரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்றவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் திருவளர்ச்சோலை பொன்னுரங்கபுரம் மேட்டு தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (26) என்பதும், அவர் அங்கு கள்ளத்தனமாக மதுவிற்றதும் தெரியவந்தது. அவரை ரங்கம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருச்சி பால்பண்ணை சாலை அருகே கள்ளத்தனமாக மதுவிற்ற புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post திருச்சியில் மதுபாட்டில் பதுக்கி விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.