திருச்சி. மே 5: திருச்சியில் போதை மாத்திரை விற்றவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மலைக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் மே 3ம் தேதி காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சத்திரம் பஸ்ஸ்டாண்டு அருகே போதை மாத்திரை விற்றதாக சிந்தாமணி வென்னிஸ் தெரு பகுதியை சேர்ந்த அபிஷேக் (23 ) என்ற ரவுடியை கோட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 25 போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
The post திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடி கைது appeared first on Dinakaran.