திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

1 week ago 3

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 4 மணி அளவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சார்ஜா செல்ல தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, 4 பயணிகளின் உடைமைகளில் வெளிநாட்டு பணம் (500 சவுதி அரேபிய ரியால்) தலா 44 தாள்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.20 லட்சத்து 16 ஆயிரத்து 390 மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கைப்பற்றினர். தொடர்ந்து 4 பேரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Read Entire Article