திருச்சி மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டுக்கான வாலிபருக்கு குண்டாஸ்

2 months ago 8

திருச்சி, நவ.14: ரங்கம் வட்டம் கொடியாலம் அடுத்த புலிவலத்தைச் சேர்ந்தவர் சூர்யா (24). இவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்ததாக திருச்சி இருப்புபாதை போலீசார் அவரை கைது செய்தனர். அவர் தொடர்ந்து குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருச்சி ரயில்வே எஸ்பி ராஜன், டிஎஸ்பி சக்கரவர்த்தி ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதனடிப்படையில் சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டார்.

The post திருச்சி மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டுக்கான வாலிபருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Read Entire Article