திருச்சி அருகே தனியார் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

4 months ago 20

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே துரியப்பட்டிமேடு என்ற இடத்தில் எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரியும், வெள்ளாளப்பட்டி என்ற இடத்தில் எம்ஐடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், வேளாண் கல்லூரியும் இயங்கி வருகின்றன.

சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளை பெயரில் இயங்கி வரும் இந்த கல்வி நிறுவனங்களில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி வருமான வரி துணை ஆணையர் பாலா தலைமையில் சென்னை, திருச்சியைச் சேர்ந்த வருமான வரித்துறை அலுவலர்கள் 8 பேர் நேற்று முன்தினத்திலிருந்து இந்த கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article