திருச்சி: தொட்டியத்தில் நடைபெற்ற காளியம்மன் கோயில் தேர் திருவிழாவின்போது திடீரென பெய்த கன மழையால் கை குழந்தையுடன் ஒதுங்க இடம் இல்லாமல் தவித்த பெண்ணுக்கு, பாதுகாப்பு தடுப்புகளைத் தலைக்கு மேல் தாங்கி பிடித்து உதவிய காவலர்களுக்கு பாராட்டு குவிகின்றன. முருகராஜ், ஜாஸ்வா சில்வெஸ்டர், சந்திரமோகன், ஸ்டீபன் ராஜ் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
The post திருச்சி அருகே காவலர்களின் மனிதநேயத்திற்கு குவியும் பாராட்டு appeared first on Dinakaran.