திருக்குறுங்குடி அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி

7 hours ago 2

*பொதுமக்கள் அச்சம்

களக்காடு : களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி பேரூராட்சிக்குட்பட்ட ஆவரந்தலையில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி சார்பில் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அந்த தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு, 60 ஆண்டுகளை கடந்து விட்டதால், கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் காட்சி அளிப்பதாக புகார் கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் நீர்தேக்க தொட்டி அபாயகரமான நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்த நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு, புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் தற்போது வரை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post திருக்குறுங்குடி அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி appeared first on Dinakaran.

Read Entire Article