‘‘திமுகவை அழிக்க பலர் கிளம்பி வந்துள்ளனர்; அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’’ - உதயநிதி 

4 months ago 15

தஞ்சாவூா்: “திமுகவை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள். பல அணிகளாக சிதறி கிடக்கும் அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள்,” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “நான் துணை முதல்வராக வரவேண்டும் என்ற முதல் குரல் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து தான் வந்தது. அதன் பிறகு நான் துணை முதல்வராக நியமிக்கப்பட்டேன். நவம்பர் மாதம் பொதுவாக மழை பெய்யும் மாதம் என்பார்கள். இன்று நான் உங்கள் அன்பு மழையில் நனைந்து தஞ்சாவூருக்கு வந்துள்ளேன். கருணாநிதி தஞ்சாவூர் தொகுதியில் நின்று வென்றார். தஞ்சாவூர் மண்ணில் அவர் கால் படாத இடமே கிடையாது. முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கடி நான் டெல்டாக்காரன் என கூறி மகிழ்வார். அதேபோல் நானும் டெல்டாகாரன் தான் என்ற பெருமையோடு இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.

Read Entire Article