திமுகவில் இணைந்த அமமுகவினர்: சுந்தர் எம்எல்ஏ வரவேற்பு

6 months ago 23

 

மதுராந்தகம், நவ. 17: அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட அமமுக கட்சி அவைத் தலைவரும், தலைமை பேச்சாளருமான தர்மலிங்கம், கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது பஷீர், மோகன்ராஜ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாற்று கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

புதிதாக இணைந்தவர்களுக்கு திமுக கட்சியின் சால்வை அணிவித்து க.சுந்தர் எம்எல்ஏ வரவேற்று பேசினார். இதில் தொழிலதிபர் அரேபியன் கார்டன் அப்துல் நபீல், திமுக அயலக அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் பாரதிபாபு, கல்பாக்கம் தனசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post திமுகவில் இணைந்த அமமுகவினர்: சுந்தர் எம்எல்ஏ வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article