சென்னை: “தமிழகம் எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் என முதல்வர் பேசியிருக்கிறார். திமுகவின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் செயல்பாடால்தான் அமலாக்கத்துறை சோதனை இங்கு நடைபெறுகிறது,” என்று திருச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்.19) நடைபெற்றது. இதில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபடுவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.