திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம்: ஏஐசிசிடியு

8 months ago 38

வண்டலூர்: சட்டப்பேரவை தேர்தலில் தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஏஐசிசிடியு சார்பில் பிரச்சார இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சிலின் (ஏஐசிசிடியு) சென்னை பெருநகர மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை மாவட்ட தலைவர் அ.ஆபிரகாம் தலைமையில் வண்டலூரில் நடைபெற்றது. இதில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 24,25,26 தேதிகளில் டெல்லியில் நடைபெறும் ஏஐசிசிடியு அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமாக்கவும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொழிலாளர் விரோத மோடி அரசை கண்டித்தும், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், திமுக அரசு தேர்தலில் தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Read Entire Article