விருத்தாச்சலம்: “கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளனர். திமுக செல்வாக்கு இழந்துவிட்டது என்பதையே இந்த நியமனம் காட்டுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
‘மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் கடந்த 7-ம் தேதி முதல்கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கோவையில் தொடங்கினார். தொகுதிவாரியாக பிரச்சாரம் செய்துவரும் நிலையில், திங்கள்கிழமை கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “குறிஞ்சிப்பாடியில் ஓர் அமைச்சர் இருக்கிறார். அதுவும் வேளாண்மைத் துறை அமைச்சராக இருக்கிறார். இங்கு வந்திருப்பவர்கள், விவசாயிகளுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா?