திமுக எம்.பி.க்கள் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் செல்ல கொறடா உத்தரவு..!!

5 months ago 16

டெல்லி: இன்றும் நாளையும் திமுக எம்.பி.க்கள் மக்களவை, மாநிலங்களவைக்கு வந்திருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதானி முறைகேடு விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு அனுமதிக்காததால், நாடாளுமன்ற வளாகத்தில் தினந்தோறும் புதுவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால் இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

ஏற்கனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், திமுக எம்.பி.க்கள் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டுள்ளார். முக்கியமான மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற இருப்பதால் இந்த உத்தரவை கொறடா பிறப்பித்துள்ளார்.

The post திமுக எம்.பி.க்கள் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்திற்கு கட்டாயம் செல்ல கொறடா உத்தரவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article